காலம்
என்னைக் கிழித்துப்போட்டாய்,
மாயப்பசை பூசி மறுபடியும் ஒட்டினாய்...
மறுபடியும் கிழித்தாய்,
கடாசி என்னைத் தெருவில் வீசினாய்...
மறுபடியும் ஒட்டினாய்...
மறுபடியும் கிழித்தாய்...
காலமே இந்தக் காகிதத்தை
இனிவரும் நொடியில் என்னென்ன செய்வாயோ?
