புதன், 5 மார்ச், 2014


காலம் 


என்னைக் கிழித்துப்போட்டாய்,

மாயப்பசை பூசி மறுபடியும் ஒட்டினாய்...

மறுபடியும் கிழித்தாய்,

கடாசி என்னைத் தெருவில் வீசினாய்...

மறுபடியும் ஒட்டினாய்...

மறுபடியும் கிழித்தாய்...

காலமே இந்தக் காகிதத்தை

இனிவரும் நொடியில் என்னென்ன செய்வாயோ?