நேசம்
உப்பில்லா நதிகள்
சிநேகித்துவிடுகின்றன
ரோஷமின்றி...
நன்றி
நீலப்பந்தல்,
நிறையும் ஒளிப்பூக்கள்,
நிலா...
பனியில் கரைந்து பரவும்
சில்வண்டோசை..
ஓடைச்சலசலப்பில்
உலவும் மௌனம்
வரப்பில் உறங்கி
விழித்தவன் மலைக்கிறேன்
உறங்க இடம் கேட்கையில்
இரங்க்காதவர்க்கெல்லாம்
எப்படி நன்றி சொல்வேன்!