புதன், 24 ஜனவரி, 2018

அழுகை


என் நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான்
"முன்னெல்லாம் நாங்கள் கவிதைகள் எழுதுவோம்
இப்போது யாரும் எழுதுவதில்லை"

சரிதான் நண்பா
நானும் எழுத்துவதில்லைதான்

கவிதை பிறக்கும்
காதல், மகிழ்வு, கருணை
துயர், வெறுமை, விரக்தி
உழைத்தல், ஓய்தல், உய்த்தல்
என எல்லாப் பொழுதுகளும்
எனக்கும் உண்டு

கூடவே ஊறிப்பெருகும்
கவிதைப் பெருவெள்ளம் பொங்கும்
நேச மனமுண்டு

சப்தமிட்டுக் கூவும் என்
கவிதைக் குழந்தைகளை
அழவிட்டு அகன்று போகிறேன்
தினமும்

கவிதை உண்டு மனிதர் பசியாறும்
காலம் வரும்வரை
இதுவே எனதும் உனதும்  விதி


சமர்ப்பணம்

உன் உள்ளங்கை
நெல்மணி நான்
விதைப்பதும் சமைப்பதும்
உன் விருப்பம்