தெரிதல்
என் குருதி முழுவதும்
நம்பிக்கையின்மை நிறைந்துள்ளது.
என் தெருக்களில்
சந்தேகங்களின் விளக்குகள் எரிகின்றன.
கூழாங்கற்களின் தேசத்தில்
எல்லவற்றையும்
எடுத்து வீசும்வரை
தென்படுவதில்லையே வைரங்கள்.
வீசும் கற்களின் சலனமும் சப்தமும்
என்னைச் சூழ்ந்துள்ளது.
இருந்தாலும்
எடுத்து வீசிக்கொன்டிருக்கிறேன்
ஒவ்வொரு கூழாங்கல்லாய்.



