
மோனித்திரு என் அருகில்நிலவின் அழகுபற்றி,
மலரின் மென்மைபற்றி,
தேனின் சுவைபற்றி,
சேற்றுவயல் வாசம்பற்றி
பேசுவதானால் கூடவராதே.
மெய் வாய் கண் மூக்கு செவி
எனக்குண்டு.
மோனித்திரு என்னருகில்.
மெய் வாய் கண் மூக்கு செவி
இவைகளல்லாத ஒன்றால்
உணரவேண்டும் நான் உன் இருப்பை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக