தெரிதல்
என் குருதி முழுவதும்
நம்பிக்கையின்மை நிறைந்துள்ளது.
என் தெருக்களில்
சந்தேகங்களின் விளக்குகள் எரிகின்றன.
கூழாங்கற்களின் தேசத்தில்
எல்லவற்றையும்
எடுத்து வீசும்வரை
தென்படுவதில்லையே வைரங்கள்.
வீசும் கற்களின் சலனமும் சப்தமும்
என்னைச் சூழ்ந்துள்ளது.
இருந்தாலும்
எடுத்து வீசிக்கொன்டிருக்கிறேன்
ஒவ்வொரு கூழாங்கல்லாய்.

புரிதல்களுக்கு அப்பாற்பட்டது,
பதிலளிநீக்குநிறைய விடயங்கள்....
simply superb poem.
add followers gadjet to ur blog and publish it in thamizmanam.com.